புதுதில்லி, ஆக.4- வாகன விற்பனைத் துறையில் கடந்த மூன்று மாதங்களில் இரண்டு லட்சம் பேர் வேலைகளை இழந்துள் ளதாக இந்திய வாகன டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகனங்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் டீலர்கள் செலவைக் குறைக்க பணியாட் களை வேலையை விட்டு நீக்கி வரு கின்றனர். இதனால் கடந்த மூன்று மாதங்களில் இரண்டு லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக இந்திய வாகன டீலர்கள் சங்கம் தெரி வித்துள்ளது. தற்போது நெருக்கடி குறைவதற்கான வாய்ப்பு இல்லாத தால் மேலும் பலர் வேலைகளை இழக்கக்கூடும் என்றும் நிறைய ஷோ ரூம்கள் மூடப்படலாம் என்றும் வாக னத் துறையில் அரசு உடனடியாக தலையிட்டு ஜிஎஸ்டி நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்றும் டீலர்கள் சங்கம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள் ளது.
இதுகுறித்து இந்திய வாகன டீலர்கள் சங்கத் தலைவர் ஆஷிஷ் ஹர்ஷராஜ் காலே பிடிஐ செய்தி நிறு வனத்திடம் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே பணியிழப்புகள் வாடிக்கையாகிவிட்டாலும், கடந்த மூன்று மாதங்களில் பெருமளவி லான ஊழியர்கள் வேலையிழந் துள்ளனர். மே மாதத்தில் தொடங்கிய நெருக்கடி ஜூன், ஜூலை கடந்து இப்போதும் தொடர்கிறது. முதற் கட்டமாக, விற்பனை ஊழியர்கள் கணிசமான அளவில் பணிகளை இழந்துள்ளனர். ஆனால் இந்த நெருக்கடி இதேபோல தொடர்ந்தால் தொழில்நுட்ப ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், வாகன விற்பனை குறைந்தால் வாகன சர்வீஸும் குறை யும். இது ஒரு சுழற்சி போன்றது. ஏறத் தாழ இரண்டு லட்சம் பேர் வேலை களை இழந்துள்ளனர். இத்தொழி லில் எங்களுக்கு கிடைக்கும் லாப மும் கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சியை எட்டவில்லை. அத னால் நெருக்கடி அதிகரிக்கும்போது நிதியிழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இத் தொழிலில் ஊழியர்கள்தான் எங்க ளது பொக்கிஷம். வேறு வழியில்லா மல் கடைசியாக ஊழியர்களையே பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டா யத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.